Friday, June 5, 2009

பறவைகள் பலவிதம்

பறவைகள் பலவிதம்....
ஒவ்வொன்றும் ஒருவிதம்.....

ஆம்
குருவி, கிளி, மைனா, புறா, மயில்,
அன்னம், காகம், கழுகு என்று அடுக்கிக்கொண்டு போகலாம்
ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்திலும் அழகு.
ஒவ்வொன்றிற்கும் சில உணவுப்பழக்கங்கள்.
ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு வலிமை.
ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு உயரத்தில் பறக்கும் தன்மை.

கழுகைப் போல, குருவியால் பறக்க முடியுமா?

காகம் தெருவில் இறந்து கிடைக்கும் நாயின் எச்சங்களைத் தின்னும்.
கிளியும், குருவியும் அதைத் தின்னுமா?
தின்னாது.
என்ன பசியாக இருந்தாலும் அதை, அந்த அசிங்கத்தைத் தொடாது.

தனக்கென உரிய தானியங்களை,
மற்றும் கனிகளை மட்டுமே தேடிப்பிடித்து அவைகள் உண்ணும்.

அதிசயம் என்ன வென்றால்,
எண்ணற்ற பறவைகளைப் படைத்த
இறைவன் அவற்றிற்கு உரிய உணவையும் தந்திருக்கிறான்.

No comments:

Post a Comment