Saturday, October 17, 2009

அடுத்து பெண்

உன்னை விடை கொடுத்து
பிரிய போகும்...
நிமிடங்களில் தான் நான் அறிந்தேன்
பிரிவின் துயரத்தை...

அடுத்து சூரியன்

ஒபாமா நோபல் பரிசு

ஒஅபாமாவுக்கு நோபல் பரிசு. ஒரு கண்ணோட்டம். உலகமே சேர்ந்து உற்றுநோக்கிய ஒரு தோற்றம். ஒபாமா வந்ததிலிருந்து ஒரே ஒரு ஒப்பாரி. நாங்கள் மாற்றுவோம். எப்போது எங்கே. இங்கே நாங்கள் கவனிக்க வேண்டிய ஒன்று, அதாவது, கல்லாவில் பணமில்லை. இவரின் பேச்சை வைத்தே இவரை உளவுத்துறையினர், ஜனாதிபதி என்றபட்டத்துடன், கொண்டுவந்துவிட்டார்கள். அடுத்த்து, காலதேவனும், தான் செய்யவேண்டிய வேலைகளுக்காகவும், இவரைப்போல் ஒருவரை சகலமக்களின் மனங்களிலும் ஏற்றி , உலகத்தில் மிகப்பெரிய பதவியில் அமர்த்திவிட்டார். அமர்த்தியதும் தான் இவருடைய கதாபாத்திரத்தின் தன்மை எல்லோருக்கும் விளங்கியது. அவர் ஒரே கதைக்கிறாரோ இல்லையோ, அவரிடம் இராஜதந்திரமில்லை என்கிறது ஒரு பக்கம். இதெல்லாமிருக்கட்டும், ஏன் நோபல் பரிசு என்று என்னைமாதிரி வேறு கோணங்களில் யோசிப்பவர்களின் மனங்களில் இருந்து....

இப்பொழுது, இங்கே வருவோம், ஏன் இவருக்கு நோபல் பரிசு. இவர் வந்தவுடன், பல்வேறு தரப்பிட்த்துமிருந்தும் பல்வேறு கருத்து வேறுபாடுகள். இவர் வருமுன்பு உலகம் வெடித்துச்சிதறுமளவுக்கு பகைமை தோன்றி, காதல் அன்பு பாசம், நேசம் எல்லாமே சாலைகளில் வெறிச்சோடியிருந்தது. அந்தளவுக்கு மனமே வெறுத்துப்போன மக்கள், உயிரைமாய்த்துக்கொள்ளுமளவுக்கு உலகம் உருண்டுகொண்டிருந்தது. இங்கே அமெரிக்காவில், ஜனாதிபதிக்கு கீழே ஒரு மட்டக்குழு இருக்கின்றது. அதுதான் எல்லாவற்றையும் தனியே கவனித்துக்கொண்டிருக்கின்றது. ஈரானிலும் இருக்கின்றது. தமிழீழத்திலும் ஒரு நாள் இருந்தது தான். இப்படியே சொல்லிக்கொண்டிருக்கலாம்.... முதலில் ஒபாமாவுக்கு பலபக்கத்திலுமிருந்து நெருக்குதல். ஈரானுடன் பேச்சுவார்த்தை, ரஷ்யா ராச்சியத்துடன், அமைதிப்பேச்சு, அவர்களுக்கு முன்பு இருக்கும் ஆயுதங்களை அகற்றுதல், வட கொரியாவுடன் பேச்சு, வட கொரியர்களுடன், அமெரிக்கர்கள் பேசிக்கொண்டிருந்தவேளை, பேசிக்கொண்டிருந்தவர்கள் வைத்த வேண்டுகோள், நாங்கள் உங்களுடன் பேசுவதைவிட கிளின்டனுடன் பேசுவது என்றால் இந்த பேச்சுவார்த்தையை மேற்கொள்ளலாம் என்று வேண்டுகோள் விடுத்தனர். இதன் பின்னணி, இரண்டு அமெரிக்க பத்திரிக்கையாளர்களை, தங்களுடைய எல்லைகளுக்குள் தென் கொரியாவிலிருந்து அத்துமீறியதால் கைதுசெய்து தம்வசப்படுத்தி வைத்திருந்தார்கள். வட கொரியர்கள் பேச்சுவார்த்தை மேசையில் வல்லவர்கள், சூரர்கள். ஒரு பொழுது, கிளின்டன் ஜனாதிபதியாக இருந்த பொழுது, தனது ராஜதந்திரிகளை பேச்சுவார்த்தை மேஜையில் அமர்த்தி பேசிய பொழுது பல விடயங்கள் பற்றி பேசும் பொழுது, பல விட்டுக்கொடுப்புகளும் மேற்கொள்ளப்பட்ட்து. அதிலிருந்து வடகொரியர்கள் பலமுறை கிளின் டனுடன் பலவித பேசுசுவார்த்தைகளில் வென்றிருக்கிறார்கள். தங்களுக்கு வேண்டியனவற்றை பெற்றதற்குப்பிறகு. பின்பு, கிளின்டன், அவர்களின் வேண்டுகோளிற்கிணங்க ஒருமாத பேச்சுவார்த்தைக்குப்பிறகு வடகொரியாவுக்கு சென்று அவர்களின் விடுதலைக்கு உதவினார். இதன் பிரதிபலிப்பு, ஒபாமாவுக்கே.

ஏன் ஏன் ஏன்???????

எனக்கு நாகேஷின் படம் தான் நினைவுக்கு வருகிறது. நினைவுக்குவரவில்லை. நீர்குமுழியாகவிருக்கும். அதில் நாகேஷ் தனது அலுவலகத்திற்கு நடந்து வருவார், அவரது உதவியாளர் பல முறை, ஒரு நபரைப்பற்றிப்போட்டுக்குடுத்துக்கொண்டிருப்பார். நாகேஷ் அவருக்கே பல பதவிகளைக்கொடுப்பார். ஆச்சர்யப்பட்ட உதவியாளர் கேட்பார். ஏன் சார் இவனுக்கு இந்தப்பதவியெல்லம் கொடுக்கிறீர்கள். அவன் தானே ஒன்னுக்குமே உதவாதவன் என்று. உடனே நாகேஷ் சொல்வார், ஒருவர் ஒர்ன்றுமே சொல்லவில்லையென்றா அவனுக்கு பதவிக்குமேல் பதவி பொறுப்புக்குமேல் பொறுப்புகொடுத்தால் அவனால் முடியும். அதனால் தான். அப்படித்தான் ஒபாமாவுக்கும் நோபல் பரிசு கொடுத்த்தன் பிண்ணனியும். ஏற்கனவே தமிழீழப்போராட்ட்த்தை தடுக்க இயலாமலும், உண்மையை தெரிந்துகொள்ளமுடியாமலும் சிதறடித்து, பொதுமக்களை இருபதாம் நூற்றாண்டில் எங்குமில்லாத அளவு கொலைகள், கற்பழிப்புகளுக்கெல்லாம் உடந்தையாக இருந்து, ஜநாசபை என்ற போர்வையில் எல்லாதவறுகளையும் சவையேற்றியவருக்கு இவ்வளவு பொறுப்பு கொடுக்கப்பட்ட்து வரவேற்க்கத்தக்கது.

இன்று ஜிம்மி கார்ட்டர் சொல்கிறார், இந்தபரிசு இவருக்கே உரியது.

Saturday, July 25, 2009

[பச்சை]

பச்சை பச்சை
என்று கத்துவோர்
கவனத்துக்கு
ஒரு நிமிடம்
ஹலோ...... ஹலோ.....
இங்கே.... இங்கே....
வாங்க... வாங்க......
ம்ம்ம்ம்ம்...
இந்த சீமேந்து தட்டுகளை
பூமிக்குமேல் போர்வையாக போட்டு
சூரியனிடமிருந்து இயற்கையாக வரும்
ஒளியை மறைத்து
இரசாயன பாசாணங்களை தூவி
பச்சையை வீணாக அழித்து

பிரபல வெப்ப நகரங்களை உருவாக்கி
இயற்கையின் சீற்றத்துக்கு உட்படுத்திவிட்டு
முழி பிதுங்கி நிற்கும் விண்ணர்களே
உங்களை நான் வரவேற்கிறேன்
வாழ்க நிம் செயல்,
தொழில்நுட்பம்
ஆனால்,
பின்னோக்கி ஒரு முறை வரலாற்றை புரட்டவேண்டும்
முன்பொருகாலத்தில்,
இதுபோன்ற தொழில் நுட்பங்கள்
இருந்திருக்கின்றன
புரட்டுங்கள்...
பண்டைய தொழில்நுட்பவியலாளர்கள்
இதனைவிட இன்னும் பல தொழில் நுட்பங்களை கையாண்டிருக்கிறார்கள்
இயற்கை சீற்றத்தில் இருந்து காப்பார்றியிருக்கிறார்கள்

[மரக்கிளை]

மரக்கிளை.......
மரக்கிளைகள்
மக்களை ஏற்ற தாழ்வின்றி
பாரபட்சமின்றி

இயற்கையின் சீற்றத்திலிருந்து
எம்மைப்பாதுகாக்கின்றன
அழிக்காதீர்..........
அழித்தால்
இயற்கை அன்னை சீற்றம்
கொண்டு
எம்மை
எந்தவித பாகுபாடுமின்றி
அழித்துவிடும்
உண்மை....

Monday, July 20, 2009

[நித்திரை]

ஒரு
தற்காலிக
இறப்பு

அதிசயம்

கல்லுக்குள் ஈரம்
நீருக்குள் நெருப்பு
நிச்சயமுண்டு

[நினைவு]

நினைவு என்பது
ஒரு அன்பான பாதை
அதில்
இதயங்கள் உண்மையானவை

[மனிதன்]

[பலமும்]
[பலவீனமும்]
கலந்த
கலவையே
மனிதன்

Wednesday, July 15, 2009

[மறதி]

எம்மிடம் [மறதி] என்றொரு குணம் இருக்கிறபடியால் தான்
[பூமியில்] எல்லாமே சுமுகமாக நடக்கின்றது

Saturday, July 11, 2009

குணங்கள்

செல்வத்தை இழந்துவிட்டாயா -
எதையும் நீ இழ்ந்துவிடவில்லை
ஆரோக்கியத்தை இழந்துவிட்டாயா -
ஆம் சிலதை இழந்துவிட்டாய்
நல்ல குணங்களை இழந்துவிட்டாயா -
எல்லாவற்ரையும் இழந்துவிட்டாய்

கீதாசாரம்

எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது :
ஒவ்வொருவருக்கும் கொடுக்கப்பட்ட நன்மைகளும் தண்டனைகளும் மிக மிக நேர்மையாகவும் நியாயமாகவும் கடவுளால் கணிக்கப்பட்டுக்கொடுக்கப்பட்டது

எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது:
ஒவ்வொருவருக்கும் கொடுக்கப்படுகிற நன்மைகளும் தண்டனைகளும் மிக மிக நேர்மையாகவும் நியாயமாகவும் கடவுளால் கணிக்கப்பட்டுக்கொடுக்கப்பட்டு வருகிறது

எது நடக்கப்போகிறதோ, அது நன்றாகவே நடக்கும்:
ஒவ்வொருவருக்கும் கொடுக்கப்போகிற நன்மைகளும் தண்டனைகளும் மிக மிக நேர்மையாகவும் நியாயமாகவும் கடவுளால் கணிக்கப்பட்டுக்கொடுக்கப்படும்

அவனன்றி ஓரணுவும் அசையாது
எல்லாம் அவன் செயல்

Friday, July 10, 2009

மனிதன்

எந்த விலங்குக்காவது நீரிழிவு, காய்ச்சல், காச நோய் தாக்கியிருக்கிறதா?
எந்தப் பறவையாவது பட்டினியால் விழுந்து செத்திருக்கிறதா?

பறவைகள், விலங்குகள் எல்லாவற்றிற்குமே
பணம் இல்லாமல் உணவு கிடைக்கும்.
அவைகள் அவற்றை நெருப்பில், மைக்கிறோ அடுப்பில்
வேகவைத்துச் சாப்பிடுவதில்லை.

எந்தப் பறவைக்காவது மனிதனுக்கு இருப்பதைப் போல உணவு அட்டை,
மிஞ்சிய உணவை எடுத்து ஃபிரிஜ்ஜில் வைத்து
அடுத்த வேளைக்கு உண்ணும் அவலமும் இருக்கிறதா?

இல்லை!
இல்லை! இல்லை! இல்லை!

உலகில் மனிதனுக்கு உள்ள தேவைகளும், கவலைகளும் பறவைகளுக்கு இல்லவே இல்லை!

பிரபஞ்சம்

ஜம்பூதங்களின் கலவை

Universe

Mixture of five Elements